Tuesday, 11 June 2013

அதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி ! 11/06/2013

அதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி !
அதிரை ஈ.சி.ஆர்.சாலையில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகிறது கனரா வங்கி. இவ்வங்கியில் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், விவசாயிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மகளீர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் சேமிப்புகணக்கு துவக்கியுள்ளனர்.

தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.

இவ்வங்கியில் இன்று காலை கணினி சர்வர் திடீரென பழுதடைந்தது. இதனால் பணம் போட, வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க நீண்ட நேரம் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்

No comments:

Post a Comment