குடிநீர் சீராக வழங்கக் கோரி அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் !
நமதூர் கடல் கரைத்தெரு,ஹாஜா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை எனக் கோரி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
தகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
No comments:
Post a Comment