அதிராம்பட்டினம், : அதிராம்பட்டினத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 9ம் தேதி பலத்த மழை பெய்தது. அன்று முதல் தொடர்ந்து நேற்று வரை இரவில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தென்னை மரம், வாழை தோப்புக்கு உகந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதுபோன்று மழை பெய்வதால் மீன்வரத்து நன்றாக இருக்கும். மழை பெய்வதை பெரிதுபடுத்தாமல் நேற்று முன்தினம் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு சென்று நேற்று மீன்பிடித்து வந்தனர்.
No comments:
Post a Comment