இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியை தடைசெய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தோனேஷியாவின் பாலித்தீவில் அடுத்த மாதம் 28ம் திகதி உலக அழகி போட்டி நடக்க உள்ளது.
இங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம், உலக அழகி போட்டியில் ஒரு பிரிவில் நீச்சல் உடைக்கான போட்டியும் நடக்கும்.
முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முறை நீச்சல் உடை பிரிவுக்கான நிகழ்ச்சி நடக்காது என உலக அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் ஜூலியா மோர்லி லண்டனில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலக அழகி போட்டி என்பது பெண்களின் உடம்பை காண்பிக்கும் போட்டி, இது இஸ்லாமிய விதிக்கு முரணானது.
எனவே இந்த போட்டியை இந்தோனேசியாவில் தடை விதிக்க வேண்டும் என உலமா கவுன்சில் அந்நாட்டு அரசிடம் வற்புறுத்தியுள்ளது.
இதேபோன்று கடந்தாண்டு நடைபெற இருந்த பொப் இசை பாடகி லேடி ககாவின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment